அப்புக்கும், ஆச்சிக்கும் வீட்டுக்குப் பக்கத்தில் பனங்காணி ஒன்டு இருக்கு. முந்தி நிறைய பனைகள் அங்கே நின்டது, இப்போ ஆறுதான் இருக்கு. ஆச்சி வலு கெட்டிக்காரிதானே, ஆறு பனையாலும் வருமானம் பல பாத்திடுவா. இப்போ பனம்பழக்காலம் தானே, ஆச்சியும் பனங்காணியில் இருந்து ஒரு பனம்பழத்தை எடுத்துக் கொண்டு வீட்டை போனா. அதைக்கண்ட அப்புவும் ஆச்சியிடம் இன்டைக்குப் பின்னேரம் பனம்பழப்பணியாரமோ என்றார். ஆச்சியும் ஓம் ஓம் என்டு சிரிச்சா!
No comments:
Post a Comment