பக்கத்துவீட்டுப் பாட்டிக்கு பனிசு என்டால் நல்லாப்பிடிக்கும் என்டு ஆச்சிக்கும் தெரியும். நல்ல பனிசு கிடைச்சால் நாலு வாங்கிக்கொண்டுவந்து பாட்டிக்குக் கொடுப்பா. அன்டைக்கும் அப்படித்தான், பேக்கரிப்பக்கம் போன ஆச்சி அப்புக்குப் பிடித்த ஜாம்பனிசும், பாட்டிக்குப் பிடித்த கறிபனிசும் வாங்கிக்கொண்டு வந்தா. பாட்டிக்கு நல்ல சந்தோசம். அப்புவும் ஜாம்பனிசை தேத்தண்ணியில் தோச்சு சுவைத்துச் சாப்பிட்டார்.
Translate
Showing posts with label தேத்தண்ணி. Show all posts
Showing posts with label தேத்தண்ணி. Show all posts
Saturday, September 19, 2020
தேநீரும், மொறு மொறுவும்!
மாலை நேரம் அடைமழையும் பெய்யுது, சாய்மனையில் படுத்திருந்து வானொலியில் ஒலிபரப்பிய பழைய பாடல்களை அப்பு கேட்டுக் கொண்டிருந்தார். ஆச்சியும் அவர் பக்கத்திலிருந்து வெத்திலை போட்டுக் கொண்டிருந்தா. ஆச்சியிடம் அப்பு இஞ்சாருமப்பா, ஒரு தேத்தண்ணி போடு என்றார். வேறு ஏதேனும் உங்களுக்கு வேணுமோ என்று ஆச்சி அப்புவிடம் கேட்க, பொக்கைவாய் சிரிப்புடன் அப்புவும் சொன்னாரே ஒரு பதில்...... ஆச்சி ஆடிப்போனா, அதிர்ச்சியில் ஆசுப்பத்திரிக்கு போயிருப்பா என்டாலும் ஆச்சிக்கு இரும்பு மனசுதான். என்ன கேட்டார் அப்பு? தேத்தண்ணியும், தனக்குப்பிடித்த மொறு மொறு தட்டைவடையும்!
Subscribe to:
Posts (Atom)