பாட்டன் பாரதி! முறுக்கு மீசை மிடுக்குத் தாத்தா. பாப்பா பாட்டுப் பாடி பாலர்களையும் ஆடிப் பாடவைத்த பார்கவி. தமிழால் தானும் உயர்ந்து தன்னால் தமிழையும் உயர்த்திய மாமேதை. அனல் பறக்கும் அவர் சொல்லும், தமிழ் வளமும் எட்டு திக்கும் திணரடிக்கும். புதுநெறி காட்டிய புலவன். புதுமைகள் பல செய்த நவீனகர்த்தா. அறிவியல் பார்வை நல்கிய கவிஞானி. மெய்ஞ்ஞான விஞ்ஞானங்களின் கூட்டுச் சேர்க்கை அவர் படையல். புதிய எதிர்காலத்தை உருவாக்கக் கனவு கண்ட கவிக்குயில். முண்டாசுக்கவி வாழ்ந்த காலமோ சொற்பம் ஆனால் அவர் பெயர் வாழும் காலமோ முடிவிலி.
No comments:
Post a Comment