அப்புவும் ஆச்சியும் ஐசுபழம் என்டால் உடனே உருகிவிடுவார்கள் அது ஐசு விற்பவருக்கும் நல்லாத்தெரியும். அதனாலேயே அவரும் அடிக்கடி அந்தப் பக்கம் ஐசு வண்டியுடன் வருவார். ஊரில் உள்ள மற்றவர்கள் இருவரையும் பார்த்து பகிடி பண்ணுவார்கள், அந்த நேரம் ஆச்சி ஐசு மேலேயே கண்ணாய் இருப்பா. அவர்கள் கதைப்பதை காதில் வாங்கமாட்டா. ஆனால் எல்லாத்தையும் மனசுக்குள் போட்டு பூட்டி வைப்பா, அவக்கு நேரம் வரும்போதெல்லாம் தன்டை மவுசை காட்டி விடுவா, ஆச்சியா கொக்கா?
No comments:
Post a Comment