ஆச்சியை பக்கத்துவீட்டுப் பாட்டி வேலியால் கூப்பிடும் சத்தம் கேட்டு பாயில் படுத்திருந்த அப்புவும் நித்திரை குழம்பி எழும்பினார். இஞ்சாருமப்பா பக்கத்துவீட்டுப் பாட்டி உன்னை கூப்பிடுறா என்றார். குசினியில் வேலையாய் இருந்த ஆச்சிக்கு பாட்டி கூப்பிட்ட சத்தம் கேட்கவில்லை. உடனே விறு விறு என்று வேலிப்பக்கம் போனா. பாட்டி கையில் ஒரு சரை. சரையில் என்ன இருக்கு என்டு பாட்டியிடம் கேட்டா ஆச்சி. உனக்குப்பிடித்த பருப்புவடைகள் இருக்கு என்று சொல்லிச் சிரிச்சா பாட்டி. ஆச்சியும் சிரிச்சிக்கொண்டு சரையை வேலியால் வாங்கினா.
No comments:
Post a Comment