Translate
Tuesday, October 6, 2020
ஆதி மொழி!
Saturday, October 3, 2020
சோதிடம்!
சதுரகிரி
Thursday, October 1, 2020
Tuesday, September 22, 2020
நவராத்திரி!
அம்பிகையைக் கொண்டாடும் காலம் நவராத்திரி. சிவனுக்கு ஒரு இராத்திரி சிவராத்திரி. ஆனால், அம்பிகைக்கு ஒன்பது இராத்திரி நவராத்திரி. அனைத்து இயக்கங்களுக்கும் ஆதார சக்தியாக இருப்பவள் அம்பிகையே.
நவ என்றால் ஒன்பது என்று மட்டுமல்லாமல், புத்துணர்ச்சி என்ற பொருளும் உண்டு. நவராத்திரி ஒன்பது நாள்களும் பூஜை செய்து தேவியை வழிபட்டால், நம் மனதில் புத்துணர்ச்சி பெருகும். மனம் செம்மையாகும். செம்மையான மனதின் எண்ணங்களும் செம்மையாகும். செயல்களும் செம்மையாகும்; வாழ்க்கையும் செம்மையுடன் சிறப்பாகும். நவகிரகங்களினால் ஏற்படக்கூடிய சகல விதமான தோஷங்களையும் நீக்கும். எனவே நவராத்திரி காலங்களில் அம்பிகையைப் பக்தி சிரத்தையுடன் வழிபடவேண்டும்.
கேதார கௌரி விரதம்!
இமயமலை உள்ள கேதாரம் என்ற திருத்தலத்தில் சிவபெருமானை வணங்கி பார்வதி தேவி அதாவது "கௌரி "விரதத்தினை மேற்கொண்டார், அதனால் அந்த விரதத்திற்கு கேதார கௌரி விரதம் என்ற பெயர் வந்தது, இந்த விரதம் மேற்க்கொண்டதால் தான் உலகை காத்து இரட்சிக்கும் சிவபெருமானுக்கு சமமான நிலையில் அன்னை பார்வதிதேவி பராசக்தியாகப் போற்றப்படுகிறார்கள்.
சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து சிவனின் இடது பக்கம் பாதி உடம்பை பெறக்காரணம் கேதார கௌரி விரதமாகும்.
புரட்டாசி மாத சுக்கிலபட்ச தசமி முதல் சதுர்த்தசி (ஐப்பசி தீபாவளி அமாவாசை ) 29 நட்கள் விரதம் இருக்க வேண்டும், இந்த விரதம் எடுப்பவர்க்ள் சிவ-பார்வதியால் சகள சௌபாகியங்களும் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள் என புராணங்கள் கூறுகின்றன
தீபாவளிப் பண்டிகை பூஜைகள் முடிந்த பின் பூஜையறையில் விளக்கேற்றி சிவன் பார்வதி படத்தின் முன்பு அமர்த்தி தியானம் செய்ய வேண்டும், ஓம் நமச்சிவாய என்னும் மந்திரத்தை நாள் முழுவதும் துதிக்க வேண்டும்.
விரதம் ஆரம்பித்த நாளிலிருந்து 29 இழைகளைக் கொண்ட நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு, இறுதி நாளில் அந்த நூலைக்கொண்டு ஆண்களின் வலது கையிலும், பெண்களின் இடதுகையிலும் அணிந்து கொள்வார்கள், மேலும் 20 நாளும் ஒரு பொழுது, உணவருந்தி சதுர்த்தசி அன்று உபவாசம் இருந்து மறுநாள் காலை சூரிய உதயதிற்கு முன் குளித்து முடித்து உணவருந்தி விரதத்தை முடிப்பார்கள்.
Saturday, September 19, 2020
ஆச்சியின் விரதம்!
ஆச்சி ஆச்சி என்டு படலையில் யாரோ கூப்பிடும் குரல் கேட்டு ஆச்சிக்கு முழிப்பு வந்தது. நாலு நாளாக ஆச்சிக்கு நாரி நோவு அதுதான் கொஞ்சம் அசந்து படுத்துட்டா போல, இல்லாட்டி ஐந்து மணிக்கெல்லாம் எழும்பிடுவா ஆச்சி. மெல்லமா எழும்பிப்போய் படலையை எட்டிப்பார்த்து யாரது என்டா ஆச்சி. நான் அன்னம் என்டு பதில் வரவே, படலையைத் திறந்து, வாடியம்மா வா என்டா ஆச்சி. அன்னம்தான் ஆச்சியின் வலக்கை. இப்போ நாரிநோவு எப்படி இருக்கு என்டு அன்னம் கேட்க, கொஞ்சம் பரவாயில்லை என்டா ஆச்சி. அன்டைக்கு முதலாவது புரட்டாதிச்சனி, ஆச்சி எப்பவும் ஆச்சாரமாக இருப்பா. அதுவும் விரதங்கள் என்றால் சொல்லவும் வேண்டுமா? அதுதான் அன்னம் விடியமுதலே ஆச்சி வீட்டே. தேத்தண்ணி போட்டுத்தாரேன் குடிச்சுட்டு வேலையைப்பாரு என்டு அன்புக்கட்டளை போட்டா ஆச்சி. ஆச்சியின் இந்த குணமே அனைவரையும் அசத்தும். அன்னம் தேத்தண்ணியைக் குடிச்சிட்டு தன்டை வேலையைத் துவங்க பொழுதும் விடிஞ்சுடுத்து. ஆச்சிக்கு எல்லாமே சுத்த பத்தமாக இருக்கோனும் என்டு அன்னத்துக்கு நல்லாத்தெரியும். அன்னமும் லேசுப்பட்ட ஆள் இல்லை, கட கட என்டு எல்லா வேலைகளையும் செய்வத்தில் கில்லாடி. மள மளவென வீடு, வளவு கூட்டி, வீட்டைக் கழுவி, அடுப்படியை மெழுகி, விரத நாட்களில் சமைக்கும் பாத்திரங்களை அலுமாரியில் இருந்து எடுத்து அதையும் நல்லா கழுவி, சாமி அறையில் சாமிப்படங்களைத் துடைத்து, விளக்குகளை விளக்கி முடிக்க மணி ஒன்பது இருக்கும். ஆச்சி விரததினங்களில் காலமை சாப்பிடமாட்டா. ஆனால் அப்புக்கும், அன்னத்துக்கும் பலகாரம் செய்து கொடுக்கும் பவளத்திடம் இடியப்பமும், சம்பலும், சொதியும் வாங்கினா. அப்புவையும், அன்னத்தையும் சாப்பிட வைச்சு, சுடச் சுட பால் காய்ச்சி அதில் கோப்பி போட்டு இருவருக்கும் கொடுத்து தனக்கும் சுடுதண்ணிப்போத்தலில் விட்டு வைச்சா. ஆச்சியும் அன்னமும் குளிச்சு முடிச்சு, சமைக்க துவங்கியாச்சு. விரத சாப்பாடு ஆச்சே.... சும்மா கம கம என நாலாபக்கமும் வாசனை பரவியது. பன்னிரண்டு மணிக்கெல்லாம் சாப்பாடு தயார். காக்காக்கு நல்லெண்ணெய் விட்டு விரதச்சாப்பாடு படைத்து, மூவரும் வாழையில் சாப்பிட்டனர். அன்னத்துக்கு ஒரு கிண்ணத்தில் சாப்பாடு போட்டு கொடுத்து விட்டா ஆச்சி. அப்புவும், ஆச்சியும் விறாந்தையில் கிடந்த கயிற்றுக்கட்டிலில் இருந்து வெத்திலை போட்டுக்கொண்டிருந்தனர். அப்போ ஆச்சி பின்னேரம் ஒருக்கா சிவன்கோயிலுக்குப் போய் சனீஸ்வரனுக்கு எள்ளுச்சட்டி எரிப்பம் என்டு சொல்ல அப்புவும் ஓம் ஓம் என்று தலையாட்டினார்.
பனிசும் ஆச்சியும்!
பக்கத்துவீட்டுப் பாட்டிக்கு பனிசு என்டால் நல்லாப்பிடிக்கும் என்டு ஆச்சிக்கும் தெரியும். நல்ல பனிசு கிடைச்சால் நாலு வாங்கிக்கொண்டுவந்து பாட்டிக்குக் கொடுப்பா. அன்டைக்கும் அப்படித்தான், பேக்கரிப்பக்கம் போன ஆச்சி அப்புக்குப் பிடித்த ஜாம்பனிசும், பாட்டிக்குப் பிடித்த கறிபனிசும் வாங்கிக்கொண்டு வந்தா. பாட்டிக்கு நல்ல சந்தோசம். அப்புவும் ஜாம்பனிசை தேத்தண்ணியில் தோச்சு சுவைத்துச் சாப்பிட்டார்.
பக்கத்துவீட்டு பருப்புவடை!
ஆச்சியை பக்கத்துவீட்டுப் பாட்டி வேலியால் கூப்பிடும் சத்தம் கேட்டு பாயில் படுத்திருந்த அப்புவும் நித்திரை குழம்பி எழும்பினார். இஞ்சாருமப்பா பக்கத்துவீட்டுப் பாட்டி உன்னை கூப்பிடுறா என்றார். குசினியில் வேலையாய் இருந்த ஆச்சிக்கு பாட்டி கூப்பிட்ட சத்தம் கேட்கவில்லை. உடனே விறு விறு என்று வேலிப்பக்கம் போனா. பாட்டி கையில் ஒரு சரை. சரையில் என்ன இருக்கு என்டு பாட்டியிடம் கேட்டா ஆச்சி. உனக்குப்பிடித்த பருப்புவடைகள் இருக்கு என்று சொல்லிச் சிரிச்சா பாட்டி. ஆச்சியும் சிரிச்சிக்கொண்டு சரையை வேலியால் வாங்கினா.
கொழுக்கட்டை!
பக்கத்துவீட்டு பாட்டியின் வீட்டில் விசேசம். பாட்டியின் பேத்திக்கு கொழுக்கட்டை கொண்டுபோகும் விழா. கொழுக்கட்டை அவிப்பது என்றால் ஆச்சிக்கு கைவந்தகலை. பாட்டி ஆச்சியிடம் வந்து கொழுக்கட்டை அவிக்கக் கூப்பிட்டா. ஆச்சியும் அப்புவிடம் சொல்லிவிட்டு அங்குபோய் ஊர்க்கதை கதைச்சு மெனக்கெடாமல், அரைமணி நேரத்தில் ஐம்பது கொழுக்கட்டைகள் பிடித்தா. அனைவரும் ஆச்சியைப்பார்த்து சபாஷ் போட்டனர்.
அம்மன்கோயில் மோதகம்!
அன்று ஆடி வெள்ளிக்கிழமை. ஆச்சி அம்மன்கோயில் விசேடபூசைக்கு காசு கட்டியிருந்தா. அப்புவும், ஆச்சியும் அம்மன்கோயிலுக்குப்போய் விசேடபூசைகளைச் சிறப்பாக செய்தனர். அனைவருக்கும் அம்மன்கோயில் மோதகம் பிரசாதமாக வழங்கப்பட்டது. அம்மன்கோயில் மோதகத்தின் சுவையே தனிதான். அம்மனின் அருளும்தான்🙏.
பனங்காணியின் பனம்பழம்!
அப்புக்கும், ஆச்சிக்கும் வீட்டுக்குப் பக்கத்தில் பனங்காணி ஒன்டு இருக்கு. முந்தி நிறைய பனைகள் அங்கே நின்டது, இப்போ ஆறுதான் இருக்கு. ஆச்சி வலு கெட்டிக்காரிதானே, ஆறு பனையாலும் வருமானம் பல பாத்திடுவா. இப்போ பனம்பழக்காலம் தானே, ஆச்சியும் பனங்காணியில் இருந்து ஒரு பனம்பழத்தை எடுத்துக் கொண்டு வீட்டை போனா. அதைக்கண்ட அப்புவும் ஆச்சியிடம் இன்டைக்குப் பின்னேரம் பனம்பழப்பணியாரமோ என்றார். ஆச்சியும் ஓம் ஓம் என்டு சிரிச்சா!