Translate

Tuesday, May 3, 2022

தமிழ் அன்னை!

காதொளிரும் குண்டலமும் கைக்குவளை
யாபதியும் கருணைமார்பின்
மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில்
மேகலையும் சிலம்பார்இன்பப்
போதொளிர் பூந்தாளிணையும் பொன்முடிச்
சூளாமணியும் பொலியச்சூடி
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்குதமிழ் நீடுவாழ்க!

தமிழன்னையின் காதினில் குண்டலங்களாக, ஐம்பெரும்காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி ஒளிர்கின்றது. கைகளில் அணிந்த வளைகளாக வளையாபதி எனும் காப்பியம் திகழ்கின்றது. கருணை பொருந்திய அத்தமிழன்னையின் மார்பில் (சீவக)சிந்தாமணி எனும் ஆரம் ஒளிவீசுகின்றது. அன்னையின் மெல்லிய இடையில் (மணி)மேகலை அணியப்பட்டுள்ளது. அவளுடைய திருவடிகள் சிலம்பார் இன்பப் போதொளிர்பவை- அதாவது சிலம்புகளை (சிலப்பதிகாரம்) அணிந்த திருப்பாதங்கள். சிலப்பதிகாரத்திற்கு மட்டும் ‘சிலம்பார் இன்பப்போது’ எனும் அடைமொழி ஏன்? சிலப்பதிகாரத்தைப் படிப்பவர்கள் அடையும் மகிழ்ச்சி, பெருமிதம், ஆகியன இன்பமயமானவை. ஆகவே அத்தகைய பெருமை பொருந்திய சிலம்பினை அணிந்துள்ள தமிழ்த்தாயின் திருவடிகள் இன்பம் மிகுந்த அழகான மலர்களால் அர்ச்சிக்கப்படுவனவாம்.
பின், தனது பொன்முடியாகச் சூளாமணி எனும் பெரும்காப்பியத்தையே அணிந்துள்ளாள் தமிழன்னை. இவள் அரசியாக அமர்ந்து எந்தச் செங்கோலைக் கையில் ஏந்தியுள்ளாள் தெரியுமா? ‘நீதியொளிர் செங்கோலாய்’த் திருக்குறளைத் தாங்குகிறாள் இவள். தமிழன்னை செங்கோலோச்ச இதைவிடத் தகுதியான செங்கோல் எதுதான் உளது?
அத்தகைய தமிழ் நீடுவாழ்க!

Thursday, March 25, 2021

🌴ஓலைச்சுவடிகள் எழுதுவதற்கு பயன்படுத்தப்படும், வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டும் பூக்கும், 
100 அடி உயரமுள்ள அரிய வகை கூந்தப் பனை மரம், பண்டைய காலங்களில் ஓலைச்சுவடிகள் எழுதுவதற்கு தேவையான ஓலைச் சுவடிகள் தாழிப்பனை மரங்களில் இருந்தே பெறப்பட்டன.

பனை குடும்பத்தில் மொத்தம் 21 வகையான மரங்கள் உள்ளன. இவற்றில், மிகவும் அரிதான மரம் தாழிப்பனை சாதாரண பனை மரத்தைப் போல் இல்லாமல் இந்த மரத்தின் மட்டை நீளமாக இருக்கும். சங்க காலத்தில் தென்னிந்தியாவில் தாழிப்பனை மரம் பரவலாக காணப்பட்டது. குறிப்பாக, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இந்த மரத்தை காண முடிந்தது. சாதாரண பனை மரம் வருடத்திற்கு ஒரு முறை காய் காய்க்கும்.
ஆனால், அரிய வகை மரமான தாழிப்பனை வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே காய்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

பண்டைய காலத்தில் ஓலை சுவடிகள் எழுத இந்த மரத்தில் இருந்து பெறப்படும் ஓலைகளைத்தான் பயன்படுத்த்தினார்களாம். இம்மரத்தின் ஓலைகளை பக்குவப்படுத்தி, சுவடிகள் எழுதப்பட்டன.தாழிப்பனை மரம் நன்கு வளர்ந்து 65 முதல் 70 ஆண்டுகளில் பூ பூக்கும். ஒரு முறை பூத்த பின், அந்த மரம் காய்ந்து விடும்.

Monday, March 1, 2021

மனம்போல் வாழ்வு என்பது பெரியோர் வாக்கு. அதாவது – “நமது மனதில் நாம் என்ன நினைக்கிறோமோ அதைப்போலவே நமது வாழ்க்கை அமையும்” என்பது பெரியோர் அனுபவித்து நமக்கு அருளிய கருத்தாகும். நமது மனம் நல்லதாக இருந்தால் நமக்கு நிகழ்பவையெல்லாம் நல்லவையாகவே இருக்கும்.

Wednesday, January 27, 2021

குறுந்தொகை!

தமிழின் இனிமை, குறுந்தொகையின் அழகு!

எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. 

குறிஞ்சி - தலைவன் கூற்று

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

-செம்புலப் பெயனீரார். (குறுந்தொகை - 40)

Tuesday, October 6, 2020

ஆதி மொழி!

2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் ஆறே ஆறு சமுதாய மக்களே முக்கியமானவர்கள்.

1. *தமிழர்கள்*
2. *சீனர்கள்.*
3. *ஆரியர்கள்.*
4. *அரபியர்கள்.*
5. *ரோமர்கள்.*
6. *கிரேக்கர்கள்.*
 
கிரேக்கர்கள் தங்களை கிரேக்கர்கள் அழைத்துக் கொண்டதோடு மற்றவர்களை பிசாசுகள் என அழைத்தனர்.

ரோமர்கள் தங்களை ஆளப்பிறந்தவர்கள் எனவும் மற்றவர்கள் வாழத்தகுதியற்றவர்கள் எனக் கருதினர்.

அரபியர்கள் தங்களைப் பேசத்தெரிந்தவர்கள் எனவும் மற்ற மக்களை அஜமிகள் அதாவது ஊமையர்கள் எனவும் கூறினர்.

ஆரியர்கள் தங்களை உயர்ந்தவர்களாகவும் கடவுளுக்கு நிகரானவர்கள் என்றும் மற்றவர்களை மிலேச்சர்களாக அதாவது கீழானவர்களாகவும் கருதினர்.

சீனர்கள் தங்களை முதலாளிகளாகவும் மற்றவர்களை அடிமைகளாகவும் நடத்தினர்.

தமிழர்கள் மட்டும் '
*யாதும் ஊரே யாவரும் கேளிர்* என்றனர்.

ஏனென்றால் தமிழர்கள் மட்டும்தான் இந்த உலகில் இருக்கும் அனைத்து உயிர்களையும் நேசிக்க தெரிந்தவர்கள்.

*இதுவே தமிழர் பண்பாடு.*

# படித்ததில் பிடித்தது

Saturday, October 3, 2020

உறவு!

நம்பிக்கை!

சோதிடம்!

ஜாதக பலன்கள்!

ஜாதக பலன்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நமக்கு நினைவில் வருவது ராசி நட்சத்திரம் லக்கினம் ராசி கட்டம். 

ஆனால் இவை எல்லாம் இல்லாமலே, உங்களை பற்றி உங்கள் குணத்தை பற்றி ஒரு 25 % சரியாக சொல்ல முடியும்.

அவை தான் தினசுத்தி படலம்.

நீங்கள் பிறந்த வருடம் மாதம் கிழமை திதி கரணம் யோகம் ஓரை காலம் என உங்கள் ஜாதகத்தில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அர்த்தம் உண்டு. ஒரு பலன் உண்டு. 

உதாரணமாக 90s kid எனப்படும் 1989 ஏப்ரல் to 1990 ஏப்ரல் வரை சுக்கில வருடத்தில் பிறந்தவர்கள் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருப்பார்கள். உண்மை நேர்மை என்று இருப்பார்கள். பயந்த சுபாகம் இருக்கும். எதிர்பாலினரிடம் மரியாதையாக நடந்து கொள்வார்கள்.

2k kids எனப்படும் 2000 ஏப்ரல் to 2001 ஏப்ரல் வரை  விக்கிரம வருடத்தில் பிறந்தவர்கள் சொகுசாக வாழ கூடியவர்கள். தாராள குணம் இருக்கும். 

80s kid எனப்படும் 1980 ஏப்ரல் to 1981 ஏப்ரல் வரை வரை ரவுத்ரி வருடத்தில் பிறந்தவர்கள் எளிமையாகவும் வெகுளியாகவும் இருப்பார்கள்.

அது போல மார்கழி மாதம் பிறந்தவர்கள் கை வைத்தியம் கற்றவர்களாக இருப்பார்கள். புரட்டாசி மாதம் பிறந்தவர்கள் கதைகள் படிக்க விருப்பம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

வெள்ளிக்கிழமை பிறந்தவர்களுக்கு ஆடை அலங்கார விருப்பம் இருக்கும்.

சாத்வீக குண வேளையில் பிறந்தவர்களுக்கு பொறுமை adjust பண்ற குணம் இருக்கும். 

பஞ்சமி திதியில் பிறந்தவர்களுக்கு எதிர்பாலின நட்பு அதிகம் இருக்கும்.

சகுனி கரணத்தில் பிறந்தவர்கள் அறிவாளியாக இருப்பார்கள் 

பிராம்ய யோகத்தில் பிறந்தவர்கள் சமூக சேவையில் ஈடுபாடு இருக்கும். அவர்களுக்கு செவ்வாய் யோகம் செய்யும் கிரகமாக இருக்கும்.

இப்படி உங்கள் ஜாதகத்தில் இருக்கும் ஒவ்வொரு விஷயமும் முக்கியமானவை தான். 

மேலோட்டமாக ஒரு ஜாதகம் பார்க்கும் போது அது யோகமாக தெரியும். ஆனால் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பார்கள். அல்லது கஷ்டப்படுற மாதிரி இருக்கும். கோடீஸ்வரர்களாக இருப்பார்கள். இப்படி பல விடை தெரியாத கேள்விகளுக்கு திதி  யோகம் என்று சகலத்தையும் ஆராய்ந்து பலன் எடுத்தால் விடை கிடைக்கும். ஆனால் அது கொஞ்சம் சிரமமான வேலையும் கூட.
#பிரதி

சதுரகிரி

#பிரதி
சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது.

இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும். அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.
அதேபோல் ‘ஏர் அழிஞ்ச மரம்’ என்றொரு மரம் உண்டு. இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில்
வந்து ஒட்டிக்கொள்ளும்.

இந்த ‘ஏர் அழிஞ்ச மரத்தின்’ கொட்டைகளை எடுத்து எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும் மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.

சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும். அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும்.

இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு. இந்தவிருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும். நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.

இவை எல்லாவற்றையும் விட தூக்கி சாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது. மலையில் மிக அடர்ந்த பகுதியில் – ” மதி மயக்கி வனம்” என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர். நான் கேள்விப்பட்ட வரை , எங்கள் அருகில் இருக்கும் கிராமத்துக் காரர் ஒருவர் வழி தவறி உள்ளே சென்று மாட்டிக்கொண்டு விட்டார். “மகாலிங்கம் காப்பாத்து, காப்பாத்து” என்று மூன்று நாட்கள் கதறி, ஒரு வழியாக அந்த வனத்திலிருந்து வெளியே வந்து விட்டார். அடர்ந்த காடு, நிறைய பூச்செடிகள் இருந்தது. எதுவும் கோவில் கூட இல்லை. ஆட்களே யாரும் இல்லை. பசியே தெரியவில்லை. வெளியே வந்தது ஆண்டவன் அருள் என்று, இன்றும் அவர் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டே இருக்கிறார்.
இன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் – சித்தர்கள், ரிஷிகள் – மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர். கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் மலைப்பகுதிகளில் விழுகின்றன. வீடியோ காமிராக்களில் அதை நிறைய பகதர்கள் பதிவு செய்து இருக்கின்றனர். ஏற்கனவே நாம் ” கட்டை விரல் அளவில் காட்சி தந்த சித்தர் பற்றிய பதிவை வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளோம். இவை அத்தனையும் சர்வ நிஜம். இறை நம்பிக்கை உள்ள பக்தர்கள் , வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மகாலிங்கத்தையும் , சந்தன மகா லிங்கத்தையும் – மனமுருக பூஜித்து வழிபட்டு வாருங்கள். நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமையை அந்த சிவம் உங்களுக்கு அளிக்கும்.

உங்கள் தேடல், பக்தி உண்மை எனில் – நீங்கள் மனதார நினைத்து வழிபாடு செய்யும் சித்தர் தரிசனம் உங்களுக்கு சதுரகிரியில் நிச்சயம் கைகூடும். இதை நிறைய பக்தர்கள் அனுபவித்து இருப்பதால் , இப்போதெல்லாம் சதுரகிரியில் கூடும் கூட்டத்திற்கு குறைவில்லை..

சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் தன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை.
சித்தர்களின் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களின் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளின் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவின் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவன்மலை என்றும் மகாலிங்க மலை என்றும் அழைக்கப்படுகிறது.
சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.

இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களின் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுடன் மக்களின் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சித்தர்களின் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அதில் சிறிதாவது தமது உடலில் ஒட்டட்டும் என பக்தர்கள் விரும்பி இங்கு வருகின்றனர்.